2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தெல்தோட்டையில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகுலேஸ்வரன்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, இன்று தெல்தோட்டை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு தெரிவித்தும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜ​ரட்ணம்,சாந்தினி கோன்ஹாகே, தெல்தோட்ட பிரதேசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

 தெல்தோட்ட முத்துமாரியம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாட்டுடன் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி தெல்தோட்ட நகரின் தனியார் பஸ் தரிப்பிடத்தில் நிறைவடைந்ததுடன், இங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X