2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தேசிய மக்கள் சக்திக்குசிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கொடுக்கவும்’

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜூன் 14 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின்போது, சிறுபான்மை மக்களின் வாக்குகள், தேசிய மக்கள் சக்தியின்

வெற்றி​க்கே அளிக்கப்படல் வேண்டும் என, கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மன்ஸில் முதாலிப் தெரிவித்தார்.  

கண்டியில், நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள், காலம் காலமாக பிரதான கட்சிகளுக்கு வாக்களித்த போதும், அவர்களின் பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என்றும் ஆயினும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்து வருவதாகவும் கூறினார்.  

தேசிய மக்கள் சக்தி சார்பாகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், எந்தவொரு மோசடியிலும் கலங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் என்று தெரிவித்த அவர், நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வல்லமை, தங்களது கட்சிக்கு உண்டு என்றும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மன்ஸில் முதாலிப்  மேலும் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .