2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேயிலைத் தடையை நீக்கியுள்ள ரஷ்யா

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை மீது ரஷ்யா விதித்துள்ள தற்காலிக தடையானது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை நீக்கம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிகாரிகளுடன் இன்று மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்​தே இந்தத் தடைநீக்கம் குறித்து தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேயிலையில் கெப்ரா என்ற வண்டு ஒன்று இருந்ததாகத் தெரிவித்து இம்மாதம் 18ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தேயிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .