2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘தேர்தலை அறிவிக்காமல் கதைப்பது பயனில்லை’

Gavitha   / 2021 ஜனவரி 31 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து தான் ஒதுங்கியுள்ளதாகவும் எனினும், தொழிலாளார் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராகவே தான் செயற்பட்டு வருவதாக, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.

ஹட்டனில், இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாப்பை எழுதி, அதைப் பதிவு செய்து, ஸ்தாபக பொதுச்செயலாளராக தானே செயற்பட்டு வருவதாகவும் தேர்தலொன்று அறிவிக்கப்பட்டு, அதில் தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து போட்டியிடும் பட்சத்தில், அப்போது அரசியல் பிரிவு குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இந்நிலையில், தேர்தலொன்று அறிவிக்கப்படாத காலக்கட்டத்தில் அது பற்றி கதைப்பது பயனில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர். பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே, சிறந்தத் தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

தான், பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட காலப்பகுதியில்,  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில், முக்கிய 3 பிரேரணைகளை முன்வைத்திருந்ததாகவும் குறிப்பாக சம்பள விவகாரத்தில்,  அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதை. தான் இரு பிரேரணைகளில் வலியுறுத்தி இருந்ததாகவும் அவர் கூறினார்.

அந்தக் கோரிக்கை தற்போது வெற்றியளித்துள்ளது என்று கூறிய அவர், இதன்காரணமாகவே, கால்நூற்றாண்டு காலமாக பாராமுகம் காட்டிய அரசாங்கம், இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் தலையிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பள விவகாரத்தில் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அவை நடைமுறைக்கு வருவதில் தொடர்ச்சியாகத் தோல்விகளே ஏற்பட்டுள்ளது என்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் கட்டளைக் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு நிறைவேற்றப்படாமைக்கு, கூட்டொப்பந்தமே தடையாக இருந்து வருவதாகவும் எனவேதான், தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்ற யோசனையையும் பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தென்பகுதி மக்களைப்போல மலையக மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சகல வழிகளிலும் சாத்தியமான தீர்வாக அமையும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X