2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொண்டமானுக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானால்  தாக்கப்பட்டதாக தெரிவித்து, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரபத்தனை தோட்டத்தொழிலாளியொருவரை, அத்தோட்ட நிர்வாகம் வேலைநிறுத்தம் செய்ததாகத தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, சம்பவ இடத்துக்கு, இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த வயோதிபர் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அவரை, ஆறுமுகன் தொண்டமான தாக்கியதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ.தொ.க தலைவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் ​பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X