2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொலைபேசி கம்பம் அகற்றப்படமையால் மக்கள் அவதி

Kogilavani   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் - போடைஸ் பிரதான வீதி, தரவளை காந்தி சிலைக்கு அருகில், ஒரு மாத்துக்கு முன்னர் பெய்த கடும் மழை காரணமாக விழுந்த தொலைபேசி கம்பம், இதுவரை அகற்றப்படாமையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

தொலைபேசி கம்பமானது, வீதியின் பக்கம் விழுந்துள்ளதால், பாதையின் ஓரத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், இந்தப் பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் நாளாந்தம் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் சலங்கந்த, என்பீல்ட், போடைஸ், சாஞ்சிமலை, டயகம, அக்கரப்பத்தனை, உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடுகின்றன.

பாதையின் ஓரத்தில், மின் கம்பம் விழுந்துக் கிடப்பதால், வாகனங்களுக்கு இடமளிப்பதில் நாளாந்தம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், இரவு வேளைகளில், இவ்விடத்தில் ஆபத்தான நிலையே காணப்படுவதாக வாகன சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயம் குறித்து, உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்த போதிலும், இது குறித்து இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .