2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நகை திருட்டு; இருவர் கைது

ஆ.ரமேஸ்   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை, ஹோல்ரீம் தோட்டத்திலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடியக் குற்றச்சாட்டில் இருவரை, லிந்துலை பொலிஸார் நேற்று (04) இரவு கைதுசெய்துள்ளனர்.

ஹோல்ரீம் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும்  தங்கச் சங்கிலியைத் திருடி, தலவாக்கலையிலுள்ள நகைகடையொன்றில் அடகு வைத்து, 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .