2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நான்கு வயதுக் குழந்தை பரிதாபகரமாக மரணம்

Editorial   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன் 

புஸ்ஸல்லாவ நிவ்பீகொக் தோட்டம், ஓல்ட் பீகொக் டிவிசனைச் சேர்ந்த நௌஜித் என்ற ஆண் குழந்தையொன்று (நான்கு வயது), நேற்று முன்தினம் (31)  பரிதாபகரமாக உயிரிழந்தது.

வயிற்றோட்டம், வாந்தி பேதி காரணமாக, மேற்படி குழந்தை நிவ் பீகொக் தோட்ட வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும் தோட்ட வைத்தியர், அக்குழந்தையை உடனடியாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரியவருகிறது.

எனினும் உறவினர்கள், மாவட்ட வைத்தியசாலையில்  மருந்து எடுத்துக் கொண்டு, குழந்தையை  வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் ஞாயிற்றுக்கிழமை (31) காலை,  உயிரிழந்த நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.

பிரேத பரிசோதனைக்காக,பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில், குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று, குழந்தையின் பெற்றோர் வீட்டில் இருக்கவில்லை என்றும் பாட்டியே குழந்தையைப் பராமரித்து வந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .