2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீரிழிவு தினத்தை முன்னிட்டு இரத்தினபுரியில் நடைபவனி

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சப்ரகமுவ மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், இரத்தினபுரியில் மாபெரும் நடைபவனி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா அருகில் ஆரம்பமாகி, இரத்தினபுரி சுகாதாரச் சேவைப் பணிப்பாளர் காரியாலயத்தின் அருகில் நிறைவு பெறவுள்ளது.

நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பு உட்பட தொற்றா நோய்களைத் தடுப்பதை நோக்காக கொண்டே, மேற்படி நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைபவனியில் பங்கேற்கும் குழுக்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கப்படும் என, இரத்தினபுரி தொற்றா நோய் தொடர்பான வைத்திய அதிகாரி ஜானக வன்னகு மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .