2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுவரெலியாவில் 5 அதிபர்கள் தொடர்பில் விசாரணை

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகிப்பத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

5 பாடசாலை அதிபர்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வியமைச்சின் பணிப்பாளரின் கீழ்  இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளதாகவும், குறித்த பாடசாலைகள் மத்திய மாகாணத்துக்குரிய பாடசாலைகள் என்பதால் இது தொடர்பான விசாரணை அறிக்கைகளை வழங்குமாறு மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .