2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நுவரெலியாவில் சிக்கிய கொள்ளையர்கள்

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் இடம்பெற்றதாக கூறப்படும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் கொள்ளையடித்த வாகனம், தங்க நகைகள் மற்றும் கொள்ளையிட பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் கூறியுள்ளனர்.

55 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம் மற்றும் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .