2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 6. சாந்த சந்திரசிறி

கொவிட் - 19 நெருக்கடியின் பின்னர், ஹோட்டன் சமவெளியைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05), ஹோட்டன் சமவெளியில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

​கொவிட் - 19 நெருக்கடியின் அச்சம் இன்னும் நீங்காத நிலையில், வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்தமையால், அவற்றைக் கட்டுப்படுத்துவறத்கு, ஹோட்டன் சமவெளி அதிகாரிகள் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்தனர்.

ஹோட்டன் சமவெளி, காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரையும் திறந்திருக்கும் என்றும் முதலாவதாக 50 பேர் கொண்ட குழுவுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்றும் பூங்காவின் பொறுப்பாளர் பிரதீப் குமார தெரிவித்தார்.

அத்துடன், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மீறுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர், நுவரெலியா நகரிலும் அங்குள்ள கிரகரி வாவி உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்று  (05) குவிந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .