2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நூரளையில் இரு வியாபார நிலையங்கள் தீக்கிரை

Editorial   / 2019 மார்ச் 10 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ், டி.ஷங்கீதன்

நுவரெலியா-கண்டி பிரதான வீதி, பழையக் கடை பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள இரு வியாபார நிலையங்களில், இன்று  (11) பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அந்நிலையங்கள் முற்றுமுழுதாகத் தீக்கிரையாகியுள்ளன.

இவ்வாறு எரிந்த கடைகளில், அணிகலன்கள் விற்பனை நிலையமொன்றும் புதிததாகத் திறக்கப்படவிருந்த உணவகமொன்றுமே, தீக்கிரையாகியுள்ளன.

மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .