2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நெட்ரேக் பிரதேச வீதித்தடை நீங்கியது

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை நொன்பேரியல் தோட்ட நிர்வாகத்தால் நெட்ரேக் பிரதேசத்தில் அமுல்படுத்தப்படடி்ருந்த வீதித் தடை அகற்றப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர், கடந்த 15ஆம் திகதி, சம்பவ இடத்துக்குச் சென்று, நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே, இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை நகரிலிருந்து நொன்பேரியல் தோட்டத்துக்குச் சென்று, அங்கிருந்து நெட்ரேக் எனும் சப்ரகமுவ மாகாணத்தின் மிக உயரத்தில் அமைந்துள்ள கிராமத்துக்குச் செல்லும் வீதியே, இவ்வாறு மூடப்பட்டிருந்தது.

இதனால், பல கிராம தோட்டப் பிரிவுகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், அப்பகுதி மக்கள், சுமார் 6 கிலோமீற்றர் தூரத்தை நடந்து சென்று கடந்து வந்தனர்.

இந்நிலையிலேயே, தற்போது இந்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .