2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பசறை விபத்தின் சாரதிக்குப் பிணை

Editorial   / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பசறை – 13ஆவது மைல் கல்லருகே விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸின் சாரதி, 33 தினங்களுக்குப் பின்னர் பத்து இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு  சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

பசறை – நீதிவான் நீதிமன்றத்தில் 22 ஆம் திகதியன்று பிற்பகல் மேற்படி பசறை பஸ் விபத்து தொடர்பான வழக்கு, நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில், எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கை பரிசீலனை செய்த நீதிபதி, தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவிற்கமைய, விபத்துக்குள்ளான பஸ் சாரதியை, பத்து இலட்ச ரூபாவிற்கான இரு சரீரப் பிணைகளில் விடுவித்தார். அத்துடன் அடுத்த மாதம் 20ஆம் திகதி வியாழனன்று மீளவும், பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், நீதிபதி உத்தரவிட்டார்.

மார்ச் 20 ஆம் திகதி காலை இடம்பெற்ற இப்பஸ் விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .