2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பசுவுக்கு வர்ணம் பூசியவர் கைது

எம். செல்வராஜா   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசுவொன்றை திருடி அதன் நிறத்தை மாற்றி இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்த இளைஞனை, மொனராகலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுள்ளனர்.

இவ்வாறு இறைச்சிக்காக விற்ப​னை செய்யப்பட்ட பசு, மொனராகலை - பக்கினிகாவெல பிரதேசத்திலுள்ள இறைச்சிக்கடையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வௌ்ளை நிறத்திலான பசுவொன்றுக்கே, கறுப்பு நிற வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன என்றும் தன்னுடைய பசுவைக் காணவில்லை என்று, பசுவின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், பசுவின் உரிமையாளருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இறைச்சிக்கடைக்கு சென்ற உரிமையாளர், தன்னுடை பசு நிறந்தீட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதை அறிந்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதையடுத்தே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .