2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பஞ்சு மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஞ்சு மரத்தின் கிளையொன்றை வெட்டிக்கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதான இளைஞன், பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

​மாத்தறை, தெனியாய, வரல்ல யோல்ட்டா தோட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் ஜயமோகன் என்பவரே உயிரிழந்துள்ளார். தோட்டத் தொழிலாளியான அவருக்கு, 3 வயதுடைய பெண் பிள்ளையொன்று இருப்பதுடன், அவருடைய மனைவி, 2 மாதக் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

தன்னுடைய வீட்டுக்கு சற்றுத்தூரத்தில் உள்ள பஞ்சுமரமொன்றின் கிளையை குறித்த நபர், சனிக்கிழமை மாலை வெட்டிக்கொண்டிருந்துள்ளார். அக்கிளை சரிந்து, அதிவலு​கொண்ட மின்கம்பியில் பட்டுள்ளது.  

வெட்டப்பட்ட அக்கிளையின் ஊடாகக் கடத்தப்பட்ட மின்சாரம், அவரைத் தாக்கியுள்ளது. மரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அவர், சுமார் 40 அடி உயரத்திலிருந்து, மரத்துக்கு கீழே இருந்த பாறையொன்றின் மீது தலைகீழாக விழுந்துள்ளார்.  

விபரீதத்தை அறிந்து விரைந்து ​செயற்பட்ட ஊர் மக்கள், அவரை மொறவக்க வைத்தியச்சாலைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவ்விளைஞன் உயிரிழந்துள்ளார்.  

அவருடைய சடலம், மரண பரிசோதனைக்காக, மொறவக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ​தெனியாய பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X