Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 மே 28 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
நாட்டில் கடந்த சில வாரங்களாக நீடித்துவந்த சீரற்ற வானிலை காரணமாக, மாத்தளை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதென, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பப்பாசிச் செய்கையூடாக இம்முறை நல்ல விளைச்சலை எதிர்பார்த்திருந்ததாகவும், எனினும் மழை வானிலையால், தமது பயிர்ச்செய்கைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் விவாயிகள் தெரிவித்தனர்.
மாத்தளை நாவுல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அக்கரஹந்துவ, லிஹினிபிட்டிய, மூன்றாம் மைல்கல், ஐந்தாம் மைல்கல், கரவிலஹேன, நாலந்த ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட விவசாயிகளே, பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், பாரிய நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மிளகாய், வட்டக்காய், கத்தரிக்காய், பயத்தங்காய் ஆகிய பயிர்ச் செய்கைகளும் மழையால் நாசமாகியுள்ளனவெனவும், தாம் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும், விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
19 Apr 2024