2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பல்டி அடிப்போருக்கு ​’ஐ.தே.க பாடம் கற்பிக்கும்’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலித ஆரியவன்ச, பிரசாத் ருக்மல், பிரசன்ன பத்மசிறி )
“பல்டி அடிக்கும், கூச்சலிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி காரர்களுக்கும் தாமரை மொட்டில் போட்டியிடுபவர்களுக்கும், யார் வெற்றிக்கு உரித்துடையவர்கள் என்பதை, இம்முறைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி காண்பிக்கும்” என்று, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பதுளை மாநகரசபை, பதுளை பிரதேசசபை மற்றும் லுணுகலை பிரதேச சபை ஆகிய ச​பைகளுக்கான, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததன் பின்னர், நேற்று முன்தினம் (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, கிடைத்த புதிய அமைச்சு என்ன என்று, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “அழுததால் பால் சுரந்தது. சுரந்தததை எதிர்வரும் நாட்களில் பார்த்துக்கொள்ளலாம்” என்று பதிலளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .