2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை, கொரோனா தொற்றுலிருந்து பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.

நாவலப்பிட்டிய வைத்தியசாலை சுகாதார அபிவிருத்தி   சங்கத்தால்,  இந்தப் பாதுகாப்பு ஆடைகள் தயாரிக்கப்பட்டு, நேற்று (06) வழங்கப்பட்டன.

தலா 1,200 ரூபாய் பெறுமதியான 185 பாதுகாப்பு  அங்கிகள், குறித்த சங்ககத்தால்;  தற்போது  வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, அந்தச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.தர்மகீர்த்தி தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவிவரும் இந்த நிலையில்,  அதிலிருந்து நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் தொழில்புரியும் வைத்தியர்கள் உள்ளிட்ட தாதியர்கள், ஊழியர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இந்தப்  பாதுகாப்பு அங்கிகள் குறித்த  சங்கத்தினரின் முயற்சியில்  தயாரிக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின்  தலைவர் மேலும்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .