2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதிய செயலாளர் நியமனம்

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான அமைச்சின் புதிய செயலாளராக சியாணி பத்மலதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் புதிய செயலாளராக சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேராவால், நேற்று முன்தினம்(14) நியமிக்கப்பட்டார்.

1990ஆம் ஆண்டு இலங்கை அரச நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட அவர் மாவதகம, கௌனி உட்பட பல்வேறு பிரதேச செயலகங்களில் உதவி செயலாளராகவும் மற்றும் சப்ரகமுவ மாகாண சபையில் கைத்தொழில் பணிப்பாளராகவும், சப்ரகமுவ மாகாண சபை செயலாளராகவும், சப்ரகமுவ மாகாண அரசசேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும், சப்ரகமுவ மாகாண சபையின் பிரதி பிரதான செயலாளராகவும் (நிர்வாகம் மற்றும் பயிற்சி) கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .