2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பெண்ணாக மாறிய இராணுவ வீரர்

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை நகரில், சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவரைப் போல ஆடையணிந்து நடமாடிய இராணுவ வீரரை பொலிஸார் இன்று (21) கைது செய்துள்ளனர்.

மொத்த விற்பனை நிலையத்துக் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் நடமாடுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்பிரகாரம் குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

பெண்ணைப் போல நடமாடிய நபர் ஆண் ஒருவர் என்றும் அவர், ஊவ பரணகம பகுதியைச் சேர்ந்தவர்  (வயது 21) எனவும் தெரியவந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக இவர் பெண் வேடம் பூண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .