2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 டிசெம்பர் 30 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸல்ரீ நீர்த்தேக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று(30) காலை மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காஸல்ரீ தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவரின் பாதணியை நீர்த்தேக்கத்துக்கு அருகிலிருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

குறித்தப் பெண் காச நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஹட்டன், ருவன்புர பகுதியிலிருந்து தன்னுடைய தாயின் வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போதே, அவர்  நீர்த்தேக்கத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சியித்துயிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X