2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வாஹிட் குத்தூஸ்

பதுளை - புவக்கொடமுல்ல பிரதேசத்தில், பெண்ணொருவரின் சடலம், நேற்று (16) இரவு மீட்கப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளின் தாயான, 36 வயது நிரம்பிய பெண்ணொருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் வழங்கிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பதுளைப் பொலிஸார், சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக, சடலம், பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை, பதுளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .