2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெற்றோருக்கு விளக்கமளிப்பு

எஸ்.சதிஸ்   / 2019 மே 17 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வுட் அயரபி தமிழ் வித்தியாலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் மாணவர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கிலும் பெற்றோருக்கு தெளிவுபடுத்தும் கூட்டம், பாடசாலையின் அதிபர் திருமதி சுசிலா செல்வராஜ் தலைமையில், பாடசாலையில் நேற்று (16) நடைபெற்றது.  

தமது பாடசாலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளப் போதிலும், மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்தே காணப்படுவதாகத் தெரிவித்த அதிபர், மாணவர்களின் கல்வியைக் கருத்திற் கொண்டு, பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை பாடசாலையிலுள்ள காணிகளை சுத்திகரித்து, சிரமதான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கோரினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .