2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொடிமெனிக்கே தடம்புரண்டதால் மலையக ரயில் சேவை பாதிப்பு

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, என்.பிரசாத்

 

கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயில், இன்று(5)  அதிகாலை 3.45 மணியளவில், வட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டதால், மலையகத்துக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டதுடன், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர்,  மற்றுமொரு புகையிரதம் வரழைக்கப்பட்டு, சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர், அந்தப் புகையிரதத்தில் பயணிகள் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், இன்று (4) அதிகாலை 5 மணியளவில், புகையிரதப் பாதை சீர் செய்யப்பட்டு,  ரயில் சேவை வழமைக்குத் திரும்பியதாக, நாவலப்பிட்டிய ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .