2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

போதை பொருளுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

தலவாக்கலை பகுதியில், 9 கிராம் 10 மில்லிகிராம் போதை பொருளுடன் இளைஞரொருவரை, விசேட அதிரடிப்படையினர், செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட போதை பொருளுடனேயே, மேற்படி இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, கொழும்பில் இருந்து மலையக பிரதேசங்களுக்கு வருகைத் தரும் இளைஞர்களை இலக்கு வைத்து, இவ்வாறான போதைப் பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .