2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதைப் பொருட்களுடன் சென்ற 20 இளைஞர்களும் தடுப்புக் காவலில்

Kogilavani   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.கணேசன்

சிவனொளிபாத மலைக்கு, போதைப்பொருட்களுடன் சென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 20 பேரையும் தடுப்புக்காவலில் வைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ராமமூர்த்தி, இன்று (25) உத்தரவிட்டார்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட 20 பேரிடமிருந்து, கேரள கஞ்சா மற்றும் ஹெரோய்ன் போதைபொருட்களை, சனிக்கிழமை இரவு கைப்பற்றிய ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், மேற்படி 25 பேரையும் கைதுசெய்துமுள்ளனர்.

“கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடனேயே போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன எனத் தெரிவித்த அவர்கள், பிலியந்தலை, குருநாகல், கண்டி, தெஹிவளை, றாகமை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20-30 வயதுக்கு உட்பட்டவர்களையே, இவ்வாறு கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி 25 பேரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த வாரமும் இவ்வாறு சிவனொளிபாத மலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 20 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, காசுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .