2024 மார்ச் 28, வியாழக்கிழமை

போமலின் கலந்த அரிசியால் வயிற்றெரிவு

Editorial   / 2018 ஜனவரி 10 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா மகேஸ்வரி  

நீண்ட நாட்களுக்குப் பழுதடையாமல் இருப்பதற்காக, போமலின் எனக்கூறப்படும் ஒருவகையான இரசாயனப் பதார்த்தம், அரிசியில் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக,  இரத்தினபுரியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.   

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சில வர்த்தக நிலையங்களிலேயே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுவதாகவும், அந்த அரிசியை, சமைத்து உண்ணும் போது, கடுமையான வயிற்றுவலி மற்றும் வயிற்றெரிச்சல் ஏற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.  மீன்கள், நீண்ட நாட்களுக்குப் பழு​தடையாமல் இருப்பதற்காக, கடந்த காலங்களில் இந்தப் போமலின் பாவிக்கப்பட்டதாக தெரிவிக்கும் பொதுமக்கள், அத்தியாவசியப் பொருளான அரசிக்கும், போமலின் பயன்படுத்துவது, வேதனையளிக்கிறது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X