2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டுக்கலைத் தோட்டத்தில் கரப்பந்தாட்ட மைதானம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், பி.சிவா

நுவரெலியா பிரதேச சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 12 இலட்சம் ரூபாய் செலவில், மட்டுக்கலைத் தோட்டத்தில், கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்படவுள்ளது.

மேற்படித் தோட்டத்தில், கரப்பந்தாட்ட மைதானத்தை அமைத்துத் தருமாறுக் கோரி, பிரதேச இளைஞர், யுவதிகள் மற்றும் தோட்டத் தலைவர்கள், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைவாக, கரப்பந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கானக் காணியை, தோட்ட அதிகாரி வழங்கியுள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள காணியிலேயே, கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (6)  நடைபெற்றது. இந்நிகழ்வில், நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ், தோட்ட அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X