2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மண்திட்டு சரிந்ததில் ஒருவர் காயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், செ.தி.பெருமாள் 

மஸ்கெலியா, குடா மஸ்கெலியா 320 பிரவுன்லோ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றின் மீது, கற்பாறைகளுடன் மண்திட்டு சரிந்து விழுந்ததில், நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் படுகாயமடைந்த நிலையில், கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (15) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மேற்படி வீட்டின் அறையொன்று முற்றுமுழுதாகச் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதால், 5 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரை, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைப்பதற்கு, அம்பகமுவ பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X