2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்துப் பாதிப்பு

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

 

பதுளை- வெலிமடை பிரதான வீதி, மொறேதொட்ட பாலத்துக்கு அருகில், நேற்று இரவு, பாரிய மண்திட்டு சரிந்து பிரதான வீதியில் விழுந்ததால், அவ்வீதி வழியானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதையில் ஒருவழிப் போக்குவரத்துக்கே, பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

வீதியில் விழுந்துள்ள மண்குவியல் இதுவரை அகற்றப்படவில்லை என்றும் மண் அகற்றப்பட்டதன் பின்னர், இருவழி போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றுத் தெரிவித்த பொலிஸார், மழை வானிலையைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .