2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மண்மேடு விழுந்ததில் குடியிருப்புக்கு சேதம்

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை சிங்கபுர 1ஆம் மைல்கல் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது, நேற்று இரவு, மண்மேடு சரிந்து விழுந்ததில், அவ்வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

வீட்டின் ஒரு பகுதி சரிந்து, பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் விழுந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழும்போது, வீட்டினுள் மூவர் இருந்துள்ளனர் என்றும் எனினும் இவர்கள் பாரிய சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்ததால், தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இச்சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உறவினரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .