2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மதனமோதகத்துடன் இருவர் கைது

Editorial   / 2019 மே 16 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், துவாரக்ஷான் 

 

 தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான மதனமோதகத்தை, விற்பனைக்காக வைத்திருந்த இருவரை, நேற்று (15) கைதுசெய்துள்ளதாக, மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.  கொட்டகலையைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், மதனமோதகத்துடன் அவ்விருவரையும் கைதுசெய்துள்ளனர். 

இதன்போது, 150 மில்லிகிராம் மதனமோதகத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  இது தொடர்பில், மதுவரித் திணைக்களத்தின் ஹட்டன் கிளை அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .