2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மதனமோதகத்துடன் சாரதி கைது

Kogilavani   / 2017 ஜூன் 21 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டியில், மதனமோதக விற்பனையில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ்ஸின் சாரதி ஒருவரை, நேற்று முன்தினம் மாலை கைதுசெய்துள்ள கண்டி பொலிஸார், அவரிடமிருந்து ஐந்து மதன மோதகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கண்டியிலிருந்து பொலன்னறுவைக்கு சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ்ஸின் சாரதியே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், பொலன்னறுவையிலுள்ள கிராமமொன்றில், மதனமோதகங்களைக் கொள்வனவு செய்வதுடன், அதனை கண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் நடவடிக்கையில், தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை திடீரென குறித்த பஸ்ஸை வழிமறித்த பொலிஸார், சாரதியைக் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து மதனமோதகங்களையும் மீட்டுள்ளனர்.

இவர், மதனமோதகங்களை 100 அல்லது 150 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X