2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

ஹட்டன் நோட்டன் பிரதான வீதி, சவுத்வனராஜா பகுதியில், பாரிய மரக்கிளையொன்று முறிந்து  விழுந்ததில் அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

சவுத் வனராஜா முனீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான 100 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலமரத்தின் கிளையே, இன்று மாலை 5.45 மணியளவிலே  முறிந்து  விழுந்துள்ளது.

இதன் காரணமாக, ஒஸ்போன், நோட்டன், லக்ஷபான, அங்ராம்பிட்டிய ஆகிய பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

முறிந்து விழுந்த மரக் கிளையை வெட்டி அகற்றும் நடவடிக்கையில், ஹட்டன் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .