2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரக்குற்றிகளுடன் மூவர் கைது

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித ராஜபக்ஷ

லொறியொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன், மூவரை, ஹட்டன் பொலிஸார், இன்று (14) கைதுசெய்தனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலைத் தொடர்ந்து, ஹட்டன் - ருவன்புர வீதி வழியாகப் பயணித்த லொறியை வழிமறித்துச் சோதனை செய்த பொலிஸார், மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரைக் கைதுசெய்துள்ளனர்.

ருவன்புர வீடமைப்புத் திட்டத்தின் நீரேந்துப் பகுதியில் 8 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டிருந்த யூக்கலிப்டஸ் மரங்களே இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, லொறியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனவென, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ருவன்புர, மட்டுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .