2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி

சுஜிதா   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம மேற்கு இல. 2 பிரிவைச்  சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் மீது, இன்று (20) மாலை 6 மணியளவில் மரமொன்று முறிந்து விழுந்ததில் குறித்த பெண் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பிள்ளைகளின் தாயாரான அப்பெண், விறகு சேகரிப்பதற்காக  அருகிலுள்ள காட்டுக்குச் சென்ற போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .