Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள், மூன்று நாள்களுக்குப் பின்னர், நேற்று (07), முதல் வழமைக்குத் திரும்பியது என, பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
தியத்தலாவ, பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில், கடந்த 4ஆம் திகதி இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில், ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டு வந்தனர். இதனையடுத்து, தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.
எனினும், சீரற்ற வானிலை தொடர்வதனால், மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும், ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago