2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மஹிபால ஹேரத் மொட்டில் சங்கமம்

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் மஹிபாலஹேரத், தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், கேகாலையில் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றக் கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு இணைந்துகொண்டார். 

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர்,  

“இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தில் நானும் இணைந்துகொண்டேன். இந்த நாட்டில் வாழும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட சகல இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் வேலைசெய்யக் கூடிய ஒரே தலைவர், மஹிந்த ராஜபக்ஷ ஆவார்” என்றார்.  

இந்தக் கூட்டம், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக, கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .