2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாணவர்களிடமிருந்து மாவா போதைப்பொருள் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களிடமிருந்து, மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பஸ்தரிப்பிட வளாகத்திலேயே, நேற்று (16) இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் குறித்த மாணவர்களை சோதனையிட்ட போது, ஒரு மாணவனிடம் 200 கிராம் மாவா, காட்சட்டை பையிலிருந்து மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவன் மாவா போதைப்பொருளை பாவித்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .