2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 19 ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் மூவரை, பசறை பொலிஸார் நேற்றைய தினம் (17) கைது செய்துள்ளனர். 

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,அ மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநப​​ர்கள் மூவரும் மீதும்பிடிய , ஹொப்டன் , மில்லபெத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் 67,52,44 வயதுடையவர்கள் என்றும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .