2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாதாந்தக் கூட்டம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் - டிக்கோயா மருத்துவர் சங்கத்தின் மாதாந்தக் கூட்டம், ஹட்டன் சக்தி மண்டபத்தில், இன்று (30) நடைபெற்றது.

மருத்துவர் சங்கத்தின் தலைவர் எஸ்.உதயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிகையலங்கார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கொவிட்- 19ஐ தடுப்பதற்கான பொதுச் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, சிகையலங்காரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதுத் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், தாமாக முன்வந்து உதவியவர்களுக்கு, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளிப்பது என அனைவராலும் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .