2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாத்தளை ரிவஸ்டன் வீதி 11 நாள்களுக்குப் பூட்டு

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்தி ரத்ன, இந்திக அருணகுமார

வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக, மாத்தளை, ரிவஸ்டன் வீதி, இன்று (25) முதல் 11 நாள்களுக்கு மூடப்படவுள்ளதாக,  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தளைப் பிரிவுக்கான பொறியியலாளர் பிரிவு, இன்று (24) விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது. 

மாத்தளை, இலுக்கும்புர, லக்கல வீதியின் ரிவஸ்டன் பகுதியிலிருந்து பத்தனை வரையான பகுதியே, 11 நாள்களுக்கு மூடப்படவுள்ளது.               

மேற்படி வீதி, காபட் வீதியாகப் புனரமைக்கப்படவுள்ளது என்றும் இதற்கமைவாக இன்று (25) முதல் 29 ஆம் திகதி வரையும் பின்னர் ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து 4ஆம் திகதிவரையும் இவ்வீதி மூடப்படவுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரிவஸ்டனிலிருந்து பத்தனை வரைக்கும் பயணிக்கும் பயணிகள், நாவுல நகரூடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .