2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது

மொஹொமட் ஆஸிக்   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மான் இறைச்சி என்று சந்தேகிக்கப்படும் ஐந்து கி​லோகிராம் இறைச்சியை, வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவர், வத்துகாமம் பொலிஸாரால், நேற்று (12) கைது செய்யப்பட்டார்.

வத்துகாமம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, மடவளை - கல்கெடியாவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்த இறைச்சிகள் மீட்கப்பட்டன.

இவர் வன விலங்குகளை வேட்டையாடி, இறைச்சி விற்பனை செய்து வருபவர் என்று சந்தேகிப்பதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .