2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மினி சூறாவளியால் 35 வீடுகள் பாதிப்பு

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித்த ஆரியவன்ச, வாஹிட் குத்தூஸ்

 

பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று (16) மாலை வீசிய கடுங்காற்று காரணமாக, 35 வீடுகள் பாதிப்படைந்துள்ளதென என்று, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்தார்.

ஹேகொட பகுதியிலுள்ள வீடொன்று முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன், பதுளுப்பிட்டிய, மெதபத்தன ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

இவ்வீடுகளில் வசித்து வந்த சுமார் 132 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை, பிரதேச செயலகம் வழங்கி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .