2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மின்சாரம் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல்

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்  

மலையகத்தில் தொடர்ச்சியாக இருந்து வரும் வரட்சியுடனான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து காணப்படுவதாகவும் இதனால் மின்சாரத்தை வழங்குவதில், தொடர்ச்சியாக சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.   

காசல்ரீ நீர்த்தேக்கத்தில், 50 அடி உயரத்தில் நீர் மட்டம் காணப்படுவதாகவும் மின்சாரத்துக்கு இன்னும் இரண்டு அடி நீர் மட்டம் அவசியமாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

இதேவேளை, கொத்மலை நீர்தேக்கத்தில் 1979ஆம் ஆண்டு நீரில் மூழ்கிய வர்த்தக நிலையங்கள், ரஜமகாவிகாரை, திஸ்பனவிகாரை ஆகிய விகாரைகள், கொத்மலை நீர் தேக்கத்தில் இருந்து காட்சியளிப்பதோடு, இந்தக் காலப்பகுதியில், சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .