2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீறியபெத்தை தமிழ் வித்தியாலயத்தில் காட்டு யானை அட்டகாசம்

எம். செல்வராஜா   / 2019 ஜூன் 07 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, மீறியபெத்தை தமிழ் வித்தியாலயத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், வித்தியாலய அலுவலக அறையையும் வித்தியாலய மலசலகூடத் தொகுதியையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

இது குறித்து, வித்தியாலய அதிபர் எம்.கருணாநிதி, பண்டாரவளைக் கல்விப் பணிப்பாளருக்கு புகார் செய்துள்ளார்.

இரவு நேரங்களிலேயே, காட்டு யானைகளின் அட்டகாசம் மேலோங்கியிருப்பதாகவும் வித்தியாலய அலுவலக அறை பலத்த சேதத்துக்குள்ளாகியிருப்பதால். பெறுமதிமிக்க கோவைகள், பொருகள் போன்றவை அழிந்துவிட்டதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில், இப்பகுதிக்குக் காட்டு யானைகள் வந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமையால், அந்நபர் உயிரிழந்துள்ளார் என, பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .