2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முச்சக்கவண்டி விபத்தில் ஒருவர் காயம்

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ்

இரத்தினபுரி, குருவிட்ட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு பயணித்த முச்சக்கரவண்டி, மஸ்கெலியா -நோட்டன் பிரதான வீதி, லக்கம், சீட்டன் பகுதியில் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ஒருவர், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளிபாத மலையடிவாரத்திலுள்ள தனது வியாபார நிலையத்துக்கு பொருட்களை கொண்டுச் செல்லும் போதே இவர் விபத்துக்கு உள்ளாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .