2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூன்று கொலைகள்; நால்வர் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்த உதய, பாலித ஆரியவன்ச

இரத்தினபுரி, பேராதனை, வெலிமடை ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவங்களில் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவு, கொரகஹெல மண்டதெனியவுக்குச் செல்லும் சந்தியில், நேற்று முன்தினம் இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கொரகஹெர மண்டதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.டிசனத் குமார (35 வயது) என்பவரும் சுரங்க ரசிக குமார (வயது 32) என்பவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த இரத்தினபுரி பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசரைணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை, பேராதனை – ஸ்பிரின் ஹீல் தோட்டத்தில், நேற்று முன்தினம் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு, நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில், தங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், 25 வயதுடைய இளைஞர்கள் இருவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினையொன்றே, இச்சம்பவத்துக்குக் காரணமென்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் வெலிமடை, மீரஹவத்த வெலிகடகம பிரதேசத்தில், நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், கொலையுண்டவரின் மருமகன் (வயது 35 ) என்பவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில், மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.டீ.நத்தசேன என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .